இந்த தேர்வு எழுத ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதத் தகுதி உடையவர் ஆவர். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1-லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திருப்பூர்: கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்வபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் தேர்வில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்றுத் தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50-மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ₹1,000-வீதம் 4-ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த தேர்வு எழுத ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதத் தகுதி உடையவர் ஆவர். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1-லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.