சிறுவாணி அணையிலிருந்து தினமும் 97-எம்எல்டி முதல் 103-எம்எல்டி வரை குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 28-அடியாகக் குறைந்து உள்ளது.
கோவை: கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 28-அடியாகக் குறைந்து உள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறுவாணி அணை கோவை மாநகரின் 30-வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதுதவிர வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் சிறுவாணி அணை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கோவை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணை நீர்மட்டம் 45-அடியை எட்டியது. சிறுவாணி அணை 49-அடி உயரம் கொண்டது.
கோவையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வெயில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 28-அடியாகச் சரிந்துள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஒரே மாதத்தில் சிறுவாணி அணையிலிருந்து 11-அடி அளவுக்குத் தண்ணீர் குறைந்துள்ளது.
சிறுவாணி அணையிலிருந்து தினமும் 97-எம்எல்டி முதல் 103-எம்எல்டி வரை குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 28-அடியாகக் குறைந்து உள்ளது.
இதனால் அணையிலிருந்து தினமும் 60-எம்எல்டி தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் 53-எம்எல்டி கோவை மாநகருக்கும் மீதமுள்ள குடிநீர் வழியோர கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறுவாணி அணை கோவை மாநகரின் 30-வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதுதவிர வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் சிறுவாணி அணை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கோவை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணை நீர்மட்டம் 45-அடியை எட்டியது. சிறுவாணி அணை 49-அடி உயரம் கொண்டது.
கோவையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வெயில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 28-அடியாகச் சரிந்துள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஒரே மாதத்தில் சிறுவாணி அணையிலிருந்து 11-அடி அளவுக்குத் தண்ணீர் குறைந்துள்ளது.
சிறுவாணி அணையிலிருந்து தினமும் 97-எம்எல்டி முதல் 103-எம்எல்டி வரை குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 28-அடியாகக் குறைந்து உள்ளது.
இதனால் அணையிலிருந்து தினமும் 60-எம்எல்டி தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் 53-எம்எல்டி கோவை மாநகருக்கும் மீதமுள்ள குடிநீர் வழியோர கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.