டாப்சிலிப் பகுதியில், காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: டாப்சிலிப் அருகே காலில் காயத்துடன் தவிடித்துவரும் காட்டு யானை, மருத்துவ உதவி செய்ய வனத்துறை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை, மான், என பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் டாப்சிலிப்- பரம்பிக்குளம் புலிகள் காப்பக எல்லையில், காட்டு யானைக் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், நடக்கமுடியாமல் கடந்த சில நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பதாகத் தெரிய வந்தது.
இதனால் யானை உணவைத் தேட முடியாமல் தவித்து வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து, டாப்சிலிப் பகுதியில், காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ள வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
யானையின் நிலை குறித்து அறிந்தவுடன் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை, மான், என பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் டாப்சிலிப்- பரம்பிக்குளம் புலிகள் காப்பக எல்லையில், காட்டு யானைக் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், நடக்கமுடியாமல் கடந்த சில நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பதாகத் தெரிய வந்தது.
இதனால் யானை உணவைத் தேட முடியாமல் தவித்து வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து, டாப்சிலிப் பகுதியில், காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ள வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
யானையின் நிலை குறித்து அறிந்தவுடன் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.