ரஷ்யா - உக்ரைன் போர் எதிரொலி: கோவையில் ஒரு சவரன் தங்கம் 40-ஆயிரம் தொட்டது: போர் தொடர்ந்தால் ஒரு சவரன் 50-ஆயிரம் ரூபாயாக உயரும்

உக்ரைன்- ரஷ்யா இடையே போர் தொடர்ந்தால் ஒரு சவரன் தங்கத்தின் விலை விரைவில் 48,000-முதல் 50-ஆயிரம் ரூபாயை எட்டும். போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு இருநாடுகளும் தீர்வு காண்பது மட்டுமே தங்கத்தின் விலை குறைவுக்கு வழிவகுக்கும்.


கோவை: கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக மீண்டும் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.

கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக உலக அளவில் அதிக மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நகைகள் விற்பனையே நடைபெறாத போதிலும் உலகளவில் தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து.

இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை நாற்பத்தி இரண்டாயிரம் ரூபாயை கடந்து வரலாறு படைத்தது. நோய்த்தொற்று பரவல் குறைந்ததை அடுத்து தங்கத்தின் விலை குறையத் துவங்கியது.

கடந்த சில மாதங்களாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 35, 36-ஆயிரம் ரூபாய் ரேஞ்சில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடக்கும் சூழல் ஏற்பட்டதிலிருந்தே தங்கத்தின் விலை உயரத் துவங்கியது.

கடந்த 15-நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை கோவையில் 2,000-ரூபாய் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 36-ஆயிரத்து 500-ரேஞ்சில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 38, ஆயிரத்து 500-ரேஞ்சில் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை கோவையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 40-ஆயிரம் ரூபாயை கடந்தது. இன்று வெள்ளிக்கிழமை சற்று குறைந்து 38,936-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன்- ரஷ்யா இடையே போர் தொடர்ந்தால் ஒரு சவரன் தங்கத்தின் விலை விரைவில் 48,000-முதல் 50-ஆயிரம் ரூபாயை எட்டும். போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு இருநாடுகளும் தீர்வு காண்பது மட்டுமே தங்கத்தின் விலை குறைவுக்கு வழிவகுக்கும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...