பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்: திருக்கம்பத்தில் பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு

கோயில் முன்பு நடப்பட்டுள்ள திருக்கம்பத்தில் தேர்த்திருவிழா முடியும் வரை பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுவார்கள். 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை என தொடர்ந்து 3-நாட்கள் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் மாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு, திருக்கம்பம் நடப்பட்டது. இதில் பெண் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர்.

பொள்ளாச்சி கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில், இந்த ஆண்டு மாசிமாத தேர்திருவிழா கடந்த 15-ம் தேதி இரவு நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து தினமும் 3-நேரம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது.

இதை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு கோயில் முன்பு திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. கரியகாளியம்மன் கோயிலிலிருந்து பூஜிக்கப்பட்ட திருக்கம்பம், மேள தாளம் முழங்கத் தெப்பக்குளத்துக்கு வரப்பட்டு அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

பின் கம்பத்தில் நவதானியங்கள் கட்டப்பட்டு மாரியம்மன் கோயிலுக்குப் பக்தர்கள் ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பின் கோயில் முன்புள்ள பீடத்தில் கம்பம் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை முதல் நகரில் பல்வேறு பகுதியிலிருந்து கோயிலுக்கு வந்த பெண் பக்தர்கள், கோயில் முன்பு நடப்பட்ட திருக்கம்பத்தில் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு அம்மனை தரிசித்துச் சென்றனர்.

கோயில் முன்பு நடப்பட்டுள்ள திருக்கம்பத்தில் தேர்த்திருவிழா முடியும் வரை பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுவார்கள். இதில் வரும் 1-ம் தேதி கோவில் பூவோடும், இதை தொடர்ந்து, சிலநாட்களில் பக்தர்கள் பூவோடு எடுத்துவரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின், கொடியேற்று நிகழ்ச்சியும், 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை என தொடர்ந்து 3-நாட்கள் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...