கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் சுமார் 500-மேற்பட்ட ஓய்வூதியர்கள் 76-மாத பஞ்சப்படி உயர்வை வழங்கக் கோரி முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: ஓய்வூதியம் தர வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய 76-மாத பஞ்சப்படி உயர்வை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று 7-இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாகக் கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் சுமார் 500-மேற்பட்ட ஓய்வூதியர்கள் முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்ட அவர்கள் கடந்த 6-ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற பஞ்சப்படி உயர்வைக் கடந்த 76-மாத காலமாக வழங்காமல் அரசு இழுத்தடிப்பதாகவும், உடனடியாக பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் உடனடியாக அரசு ஓய்வூதிய பிரநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் அது வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய 76-மாத பஞ்சப்படி உயர்வை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று 7-இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் சுமார் 500-மேற்பட்ட ஓய்வூதியர்கள் முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்ட அவர்கள் கடந்த 6-ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற பஞ்சப்படி உயர்வைக் கடந்த 76-மாத காலமாக வழங்காமல் அரசு இழுத்தடிப்பதாகவும், உடனடியாக பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் உடனடியாக அரசு ஓய்வூதிய பிரநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் அது வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.