கோவையில் ஆமை வேகத்தில் நடக்கும் தண்ணீர் குழாய் அமைக்கும் பணிகள் - வாகன ஓட்டிகள் பெரும் அவதி..!

இதனிடையே, தண்ணீர் குழாய் அமைக்கும் இப்பணியானது இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையும் என்று கோவை மாநகராட்சி துணை ஆணையர் தகவல்.


கோவை: கோவையில் தண்ணீர் குழாய் அமைக்கும் பணிகள் இழுபறியாக உள்ளதால், ஸ்டேட் பாங்க் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் சிரமத்திற்கு உள்ளாவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.



கோவை இரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ரோடு, மாநகரில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்று தண்ணீர் குழாய் அமைக்கும் பணிக்காக கடந்த டிசம்பர் மாதம் கடைசியில் குழி தோண்டப்பட்ட நிலையில், இன்றளவிலும் பணிகள் நிறைவடையாமல் இருப்பது பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தண்ணீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக பல மாதங்களாக தோண்டிய குழியினை மூடாமல் இருப்பதால் மோசமான நிலையில் இச்சாலை உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளும், அவசர சிகிச்சைக்கு அவ்வழியாகச் செல்லும் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் போய் சேர்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது என்று குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், ரயில் நிலையம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் மற்றும் கோயம்புத்தூர் தலைமை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை நிலையம் ஆகியவை இந்த சாலையை ஒட்டியே உள்ளன. ஆனால் அது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.



மேலும், சமீபகாலமாக அச்சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் சில நாட்களாக கழிவுநீர் சாலையில் ஓடத் தொடங்கியது.

இது குறித்து கோவை துணை ஆணையர் கூறியதாவது:-

தண்ணீர் குழாய் அமைக்கும் இப்பணியானது இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையும் என்றும், இன்று இரவு கழிவுநீர் கால்வாய் மூடப்படும் என்றும், நெடுஞ்சாலை துறை நாளை சாலை சீரமைக்கும் பணியை விரைந்து முடித்திடும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...