ரூ. 1,157 கோடி செலவில் உப்பிலிபாளையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்துக்கு அவிநாசி சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என தகவல்.
கோவை: கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அமைப்பில் சாய்வுதளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
விமான நிலைய சாலை, அவிநாசி சாலை மற்றும் காளப்பட்டி சாலை சந்திப்பை கடக்கும் வகையில் இந்த மேம்பால தளங்கள் அமைக்கப்படும் என கூறினார். ரூ.1,157 கோடி செலவில் உப்பிலிபாளையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்துக்கு அவிநாசி சாலை மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேம்பாலத்தின் பிரதான பாதைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சாலை சந்திப்புகளில் உள்ள மேம்பாலம் அமைப்பதற்கான தூண்களை கட்டும் பணியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்டத்தில் சாலையின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இதற்காக சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும் என மாநில அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் இது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது உள்ளாட்சித் தேர்தல் முடிந்து விட்டதால், பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளின் நியமனத்திற்காக காத்திருக்கிறோம் என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கிட்டத்தட்ட 20 திட்டங்கள் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதை உள்ளடக்கியதாக உள்ளது என தெரிவித்தார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
விமான நிலைய சாலை, அவிநாசி சாலை மற்றும் காளப்பட்டி சாலை சந்திப்பை கடக்கும் வகையில் இந்த மேம்பால தளங்கள் அமைக்கப்படும் என கூறினார். ரூ.1,157 கோடி செலவில் உப்பிலிபாளையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்துக்கு அவிநாசி சாலை மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேம்பாலத்தின் பிரதான பாதைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சாலை சந்திப்புகளில் உள்ள மேம்பாலம் அமைப்பதற்கான தூண்களை கட்டும் பணியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்டத்தில் சாலையின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இதற்காக சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும் என மாநில அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் இது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது உள்ளாட்சித் தேர்தல் முடிந்து விட்டதால், பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளின் நியமனத்திற்காக காத்திருக்கிறோம் என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கிட்டத்தட்ட 20 திட்டங்கள் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதை உள்ளடக்கியதாக உள்ளது என தெரிவித்தார்.