யூடியூபில் ஆபாச பதிவிட்ட 'ரவுடி பேபி' சூர்யா குண்டர் சட்டத்தில் கைது: கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி சைபர் கிரைம் குற்றவாளியான சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா கள்ளக்காதலன் சிக்கா என்கின்ற சிக்கந்தர் ஆகியோர் நடத்திவரும் யூடியூபில் மதுரையைச் சேர்ந்த குடும்பத்தினரை ஆபாசமாகப் பதிவிட்டு பேசி வந்த காரணத்தினால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறை அடைக்கப்பட்டன.

கடந்த வாரம் சிக்கா என்ற சிக்கந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து இன்று ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவு சிறைக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சைபர் கிரைம் குற்றவாளியான சுப்ரமணியபுரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவரது மகன் சிக்கந்தர் என்கிற சிக்கா(வயது-49) மற்றும் சுப்புலட்சுமி என்கிற சூர்யா ஆகியோர்கள் சமூக வலைத்தளமான YouTube Channel-லில் ஆபாசமாகப் பதிவிட்ட காரணத்திற்காகக் கடந்த ஜனவரி 04.01.2022-ம் தேதி மேற்படி இருவரையும் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேற்படி வழக்கில் தொடர்புடைய பாலவிநாயகம் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா(வயது-35) என்பவரைக் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா(வயது-35) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி உத்தரவின் படி சைபர் கிரைம் குற்றவாளியான சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா(வயது-35) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...