யூடியூபில் ஆபாச பதிவிட்ட 'ரவுடி பேபி' சூர்யா குண்டர் சட்டத்தில் கைது: கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி சைபர் கிரைம் குற்றவாளியான சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா கள்ளக்காதலன் சிக்கா என்கின்ற சிக்கந்தர் ஆகியோர் நடத்திவரும் யூடியூபில் மதுரையைச் சேர்ந்த குடும்பத்தினரை ஆபாசமாகப் பதிவிட்டு பேசி வந்த காரணத்தினால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறை அடைக்கப்பட்டன.

கடந்த வாரம் சிக்கா என்ற சிக்கந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து இன்று ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவு சிறைக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சைபர் கிரைம் குற்றவாளியான சுப்ரமணியபுரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவரது மகன் சிக்கந்தர் என்கிற சிக்கா(வயது-49) மற்றும் சுப்புலட்சுமி என்கிற சூர்யா ஆகியோர்கள் சமூக வலைத்தளமான YouTube Channel-லில் ஆபாசமாகப் பதிவிட்ட காரணத்திற்காகக் கடந்த ஜனவரி 04.01.2022-ம் தேதி மேற்படி இருவரையும் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேற்படி வழக்கில் தொடர்புடைய பாலவிநாயகம் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா(வயது-35) என்பவரைக் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா(வயது-35) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி உத்தரவின் படி சைபர் கிரைம் குற்றவாளியான சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா(வயது-35) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...