தமிழக முதலமைச்சர் முதற்கட்டமாக கோவையின் சாலைகளை சீரமைக்க ரூ.200-கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சரும் கோவையின் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கோவை: தமிழக முதலமைச்சர் முதற்கட்டமாக கோவையின் சாலைகளை சீரமைக்க ரூ.200-கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சரும் கோவையின் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுகான கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மின்சாரத் துறை அமைச்சரும் கோவையின் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி முதலமைச்சர் முதற்கட்டமாக கோவையின் சாலைகளை சீரமைக்க ரூ.200-கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கோவை விரைவில் வளர்ச்சி அடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.