விழாவில் கிணத்துக்கடவு எம்எல்ஏ செ.தாமோதரன் கலந்து கொண்டு அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து, ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழாவை இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் கிருஷ்ணசாமிபுரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு நகர செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.
விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டி.எல்.சிங், கார்த்திகேயன், மகேஷ்குமார், கனகராஜ், வினு, அரவிந்த், லட்சுமணன், கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழாவை இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் கிருஷ்ணசாமிபுரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு நகர செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.
விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டி.எல்.சிங், கார்த்திகேயன், மகேஷ்குமார், கனகராஜ், வினு, அரவிந்த், லட்சுமணன், கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.