இந்த விழாவில் பெண்களுக்கு எவர்சில்வர் பாத்திரமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
கோவை: கோவை கிணத்துக்கடவு காந்திநகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் கிளை சார்பில் கொண்டாடப்பட்டது.
காந்தி நகர் கிளை செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

இதைத்தொடர்ந்து, பெண்களுக்கு எவர்சில்வர் பாத்திரமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், கிளை தலைவர் மாணிக்கம், துணை செயலாளர் ஆறுமுகம், அங்கமுத்து, கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, அம்மா பேரவை பொருளாளர் சிங்,கற்பகம் கதிர்வேல், ஆறுச்சாமி, செந்தில்குமார், வெங்கடேஷ், பெரியசாமி, தீபா, சாந்தி, நாகரத்தினம், இந்திராணி, கேபிள் ஆனந்த், கலாமணி வரதராஜன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் கிளை சார்பில் கொண்டாடப்பட்டது.
காந்தி நகர் கிளை செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
இதைத்தொடர்ந்து, பெண்களுக்கு எவர்சில்வர் பாத்திரமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், கிளை தலைவர் மாணிக்கம், துணை செயலாளர் ஆறுமுகம், அங்கமுத்து, கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, அம்மா பேரவை பொருளாளர் சிங்,கற்பகம் கதிர்வேல், ஆறுச்சாமி, செந்தில்குமார், வெங்கடேஷ், பெரியசாமி, தீபா, சாந்தி, நாகரத்தினம், இந்திராணி, கேபிள் ஆனந்த், கலாமணி வரதராஜன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.