கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு..!

கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.


கோவை: கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பேரூர் செட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தம்பி என்ற ரவிசந்திரன் (49). இவர் பெரியகடை வீதி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை கடந்து 2020ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, வழக்கு நடந்து வந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயிலில் இருந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை ஜெயில் அதிகாரிகள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஜெயில் கைதிகள் வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதில், சிகிச்சை பலனளிக்காமல் ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...