கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோவை: கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பேரூர் செட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தம்பி என்ற ரவிசந்திரன் (49). இவர் பெரியகடை வீதி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை கடந்து 2020ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, வழக்கு நடந்து வந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயிலில் இருந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை ஜெயில் அதிகாரிகள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஜெயில் கைதிகள் வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதில், சிகிச்சை பலனளிக்காமல் ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பேரூர் செட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தம்பி என்ற ரவிசந்திரன் (49). இவர் பெரியகடை வீதி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை கடந்து 2020ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, வழக்கு நடந்து வந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயிலில் இருந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை ஜெயில் அதிகாரிகள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஜெயில் கைதிகள் வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதில், சிகிச்சை பலனளிக்காமல் ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.