தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால் பறக்கும் படைகள் கலைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, பறக்கும் படை வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் அகற்றப்பட்டன.
கோவை: கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஜனவரி 26ம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க கோவை மாவட்டத்தில் 86 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இந்த பறக்கும் படைகள் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த பறக்கும் படை வாகனங்கள் எந்த பகுதியில் உள்ளது என்பதை கண்டுபிடிக்கஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டது. தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால் பறக்கும் படைகள் கலைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, பறக்கும் படை வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் அகற்றப்பட்டன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஜனவரி 26ம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க கோவை மாவட்டத்தில் 86 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இந்த பறக்கும் படைகள் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த பறக்கும் படை வாகனங்கள் எந்த பகுதியில் உள்ளது என்பதை கண்டுபிடிக்கஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டது. தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால் பறக்கும் படைகள் கலைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, பறக்கும் படை வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் அகற்றப்பட்டன.