திருப்பூரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி துவக்கம்..!

வரும் 2ம் தேதி மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழாவும், 4ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.



திருப்பூர்: திருப்பூரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கான மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த 2011 முதல் 2016 வரை மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்று வந்த நிலையில், 2016க்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் மாமன்ற கூட்ட அரங்கு மற்றும் மேயர் அலுவலகம் செயல்படாமல் இருந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து 60 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 2ம் தேதி அவர்களுக்கான பதவி ஏற்பு விழாவும், 4ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற இருக்கிறது.



அதன் பின்பு, மாதந்தோறும் மாமன்றக் கூட்டம் நடைபெற உள்ள சூழ்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...