பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி மற்றும் 9-பேரூராட்சிகளில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி மற்றும் 9-பேரூராட்சிகளில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி ஆனைமலை, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், பெரிய நெகமம், சமத்தூர் ஜமீன் ஊத்துக்குளி சூளேஸ்வரன்பட்டி கிணத்துக்கடவு ஆகிய ஒன்பது பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக எட்டு மணி அளவில் தொடங்கியது.
பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி, ஆனைமலை வி ஆர் டி மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாகத் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு வார்டுக்கு வேட்பாளர் ஒருவர் இரண்டு முகவர்கள் மட்டுமே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி ஆனைமலை, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், பெரிய நெகமம், சமத்தூர் ஜமீன் ஊத்துக்குளி சூளேஸ்வரன்பட்டி கிணத்துக்கடவு ஆகிய ஒன்பது பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக எட்டு மணி அளவில் தொடங்கியது.
பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி, ஆனைமலை வி ஆர் டி மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாகத் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு வார்டுக்கு வேட்பாளர் ஒருவர் இரண்டு முகவர்கள் மட்டுமே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.