கைத்தறி நெசவில் புதிய உற்பத்தியாளர்களை உருவாக்க பொள்ளாச்சியில் உள்ள தனியார் பயிற்சிப் பட்டறையில், இன்று மத்திய அரசின் கைத்தறி நெசவு வளர்ச்சி ஆணையம் சார்பில், சிறப்புப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
கோவை: கைத்தறி நெசவில் புதிய உற்பத்தியாளர்களை உருவாக்க பொள்ளாச்சியில் உள்ள தனியார் பயிற்சிப் பட்டறையில், இன்று மத்திய அரசின் கைத்தறி நெசவு வளர்ச்சி ஆணையம் சார்பில், சிறப்புப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்து வரும் நிலையில், கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில், புதிய கைத்தறி நெசவாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பயிற்சிப் பட்டறையில், இன்று மத்திய அரசின் கைத்தறி நெசவு வளர்ச்சி ஆணையம் சார்பில், சிறப்புப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

45-நாட்கள் பயிற்சி வகுப்புகள் கொண்ட இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர். இந்த முகாமில் 45-நாட்களுக்குக் கைத்தறி நெசவு செய்வது குறித்தும், நெசவு செய்த துணிகளைச் சந்தைப்படுத்துவது விற்பனை செய்வது உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், நெசவாளர் சேவை மைய இயக்குனர் கார்த்திகேயன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், மத்திய அரசு சார்பில் பெண் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாமின் மூலம், ஏராளமான கிராமப்புற பெண்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும், இதன் மூலம் கிராமப்புற பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்து வரும் நிலையில், கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில், புதிய கைத்தறி நெசவாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பயிற்சிப் பட்டறையில், இன்று மத்திய அரசின் கைத்தறி நெசவு வளர்ச்சி ஆணையம் சார்பில், சிறப்புப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
45-நாட்கள் பயிற்சி வகுப்புகள் கொண்ட இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர். இந்த முகாமில் 45-நாட்களுக்குக் கைத்தறி நெசவு செய்வது குறித்தும், நெசவு செய்த துணிகளைச் சந்தைப்படுத்துவது விற்பனை செய்வது உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், நெசவாளர் சேவை மைய இயக்குனர் கார்த்திகேயன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், மத்திய அரசு சார்பில் பெண் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாமின் மூலம், ஏராளமான கிராமப்புற பெண்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும், இதன் மூலம் கிராமப்புற பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.