இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை - இலங்கை இடையே ஏப்ரல் முதல் மீண்டும் விமான சேவை இயக்கம்..!

நோய்த்தொற்று பரவல் அதிகரிக்காமல் இருந்தால் திட்டமிட்டபடி ஏப்ரலில் கோவை - இலங்கை இடையே விமான சர்வீஸ் மீண்டும் துவக்கப்படும்.


கோவை: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை - இலங்கை இடையே ஏப்ரல் முதல் மீண்டும் விமான சேவை இயக்கப்படுகின்றன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா மற்றும் இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட மூன்று வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தற்பொழுது சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு மட்டும் விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கை விமான நிலையங்கள் சர்வதேச விமான போக்குவரத்தை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் விமான நிலைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில்,

கோவை - இலங்கை இடையே மீண்டும் விமான சேவை மார்ச் 31 முதல் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த சர்வீஸ் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து துவங்க அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும், வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை வழங்கப்படும். இவை அனைத்தும் எதிர்வரும் நாட்களில் நோய்த்தொற்று பரவலின் தன்மையை பொருத்து முடிவு செய்யப்படும். நோய்த்தொற்று பரவல் அதிகரிக்காமல் இருந்தால் திட்டமிட்டபடி ஏப்ரலில் கோவை - இலங்கை இடையே இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விமான சர்வீஸ் மீண்டும் துவக்கப்படும்.

இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...