இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை - இலங்கை இடையே ஏப்ரல் முதல் மீண்டும் விமான சேவை இயக்கம்..!

நோய்த்தொற்று பரவல் அதிகரிக்காமல் இருந்தால் திட்டமிட்டபடி ஏப்ரலில் கோவை - இலங்கை இடையே விமான சர்வீஸ் மீண்டும் துவக்கப்படும்.


கோவை: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை - இலங்கை இடையே ஏப்ரல் முதல் மீண்டும் விமான சேவை இயக்கப்படுகின்றன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா மற்றும் இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட மூன்று வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தற்பொழுது சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு மட்டும் விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கை விமான நிலையங்கள் சர்வதேச விமான போக்குவரத்தை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் விமான நிலைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில்,

கோவை - இலங்கை இடையே மீண்டும் விமான சேவை மார்ச் 31 முதல் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த சர்வீஸ் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து துவங்க அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும், வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை வழங்கப்படும். இவை அனைத்தும் எதிர்வரும் நாட்களில் நோய்த்தொற்று பரவலின் தன்மையை பொருத்து முடிவு செய்யப்படும். நோய்த்தொற்று பரவல் அதிகரிக்காமல் இருந்தால் திட்டமிட்டபடி ஏப்ரலில் கோவை - இலங்கை இடையே இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விமான சர்வீஸ் மீண்டும் துவக்கப்படும்.

இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...