கோவை காந்திபுரத்தில் வணிக வளாகத்தில் படிக்கட்டில் தவறி விழுந்து பெண் பலி

காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்ற பெண் படிக்கட்டில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோவை: காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்ற பெண் படிக்கட்டில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி சுமதி (வயது 47). இவர்பொருட்கள் வாங்குவதற்காக காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள "Celebration Tower" என்றவணிக வளாகத்திற்குச் சென்றார். அப்போது படிக்கட்டில் ஏறும் போது அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...