காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்ற பெண் படிக்கட்டில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்ற பெண் படிக்கட்டில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி சுமதி (வயது 47). இவர்பொருட்கள் வாங்குவதற்காக காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள "Celebration Tower" என்றவணிக வளாகத்திற்குச் சென்றார். அப்போது படிக்கட்டில் ஏறும் போது அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி சுமதி (வயது 47). இவர்பொருட்கள் வாங்குவதற்காக காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள "Celebration Tower" என்றவணிக வளாகத்திற்குச் சென்றார். அப்போது படிக்கட்டில் ஏறும் போது அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.