சங்கரா கல்வி நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது


சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் பாரம்பரியமானதுமான ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. இந்த கையெழுத்து பிரச்சாரமானது இந்தியாவில் கால்நடை வளர்ப்போர் உரிமைகளைப் பாதுகாத்தல், வீர விளையாட்டுகளுக்கு ஊக்கம் கொடுத்தல் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டதாக இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



இந்த கையெழுத்து பிரச்சாரத்தின் போது சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிறுவன வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்போம், ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டின் பெருமை, ஜல்லிக்கட்டுக்காக ஒன்றிணைவோம்" ஆகிய வாசகங்கள் எழுதியிருந்த பதாகைகளில் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.



இந்நிகழ்வில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன், சங்கரா மேலாண்மை அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் எச்.பரியேஷ், சங்கரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதை தங்களது கையெழுத்துகளை பதிவு செய்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அக்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள், நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...