சங்கரா கல்வி நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது


சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் பாரம்பரியமானதுமான ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. இந்த கையெழுத்து பிரச்சாரமானது இந்தியாவில் கால்நடை வளர்ப்போர் உரிமைகளைப் பாதுகாத்தல், வீர விளையாட்டுகளுக்கு ஊக்கம் கொடுத்தல் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டதாக இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



இந்த கையெழுத்து பிரச்சாரத்தின் போது சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிறுவன வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்போம், ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டின் பெருமை, ஜல்லிக்கட்டுக்காக ஒன்றிணைவோம்" ஆகிய வாசகங்கள் எழுதியிருந்த பதாகைகளில் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.



இந்நிகழ்வில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன், சங்கரா மேலாண்மை அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் எச்.பரியேஷ், சங்கரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதை தங்களது கையெழுத்துகளை பதிவு செய்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அக்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள், நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...