கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படுகிறது.
மேலும், வெப்ப பரிசோதனை செய்த பின்னரே வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனைத்தொடர்ந்து, வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்கான ஆதாரங்களை காண்பித்து வாக்கு இயந்திரத்தில் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படுகிறது.
மேலும், வெப்ப பரிசோதனை செய்த பின்னரே வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனைத்தொடர்ந்து, வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்கான ஆதாரங்களை காண்பித்து வாக்கு இயந்திரத்தில் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.