கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை சி.எம்.எஸ் பள்ளியில் வாக்களித்தார்

நமது ஜனநாயக கடமையான வாக்கு பதிவினை அனைவரும் கண்டிப்பாக நினைவேற்ற வேண்டும். மக்களுக்கான திட்டங்களை யார் செய்வார்கள் என்று ஆராய்ந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.


கோவை: நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், கோவை சி.எம்.எஸ் பள்ளியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நமது ஜனநாயக கடமையான வாக்கு பதிவினை அனைவரும் கண்டிப்பாக நினைவேற்ற வேண்டும். மக்களுக்கான திட்டங்களை யார் செய்வார்கள் என்று ஆராய்ந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கோவையில் கடந்த சில நாட்களாகவே அத்துமீறல்கள் நடந்து வருகின்றது.

வீடு வீடாக பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது. இது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வாக்குகளை சேகரிப்பது என்பது மிக மோசமான செயலாக உள்ளது. இத்தனை பிரச்சனைகளையும், தாண்டி மக்கள் நல்லவர்களுக்கும், தூய்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டியது சவாலாக உள்ளது.

சில இடங்களில் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் விரட்டப்பட்டுள்ளனர். காவல்துறையினரும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை", என்று பாஜக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...