மேலும், கோவை மாநகர பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 6,190 அலுவலர்களுக்கு பயிற்சி பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை: கோவை மாநகர பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 6,190 அலுவலர்களுக்கு பயிற்சி பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 1290 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல 7 பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து மண்டல அலுவலர்கள் தலைமையிலான 95 குழுவினரால், காவல்துறையினர் பாதுகாப்போடு வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல உள்ளது.

இதற்கிடையே, வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற 6190 பணியாளர்களுக்கு கோவை நிர்மலா கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதி கட்ட பயிற்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது, அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்தராவ், கோவை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அதிகாரியுமான ரஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 1290 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல 7 பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து மண்டல அலுவலர்கள் தலைமையிலான 95 குழுவினரால், காவல்துறையினர் பாதுகாப்போடு வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல உள்ளது.
இதற்கிடையே, வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற 6190 பணியாளர்களுக்கு கோவை நிர்மலா கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதி கட்ட பயிற்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது, அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்தராவ், கோவை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அதிகாரியுமான ரஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.