ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அரசாணையை கொண்டு வர வேண்டுமென பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தகவல்


ஜல்லிக்கட்டு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் சட்ட திருத்தம் கொண்டு வர முடியாது எனவும், ஜல்லிக்கட்டு போட்டி நடக்க தமிழக அரசு ஒரு அரசாணையை கொண்டு வர வேண்டுமென பா.ஜ.க  மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க  மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் கூறியதாவது:-

பொங்கல் விடுமுறை என்பது 15 ஆண்டு காலமாக சிறப்பு பட்டியலில் தான் இருப்பதாகவும், புதிதாக எந்த அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் நீக்கவில்லை எனவும் தெரிவித்தார். 

பொங்கல் பண்டிகை இந்தாண்டு சனிக்கிழமை வருவதால் விடுமுறை நாளில் விடுமுறை அளிப்பதற்கு பதிலாக வேறு நாள் எடுத்துக் கொள்ளலாம் என கூறியதை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதாக தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும், அவசர அவசரமாக போராட்டம் நடத்துபவர்கள் முழுமையான தகவலை சேகரித்து போராட வேண்டுமென தெரிவித்தார். 

ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் சட்ட திருத்தம் கொண்டு வந்தாலும் சட்ட ரீதியாக அனுமதி வாங்க முடியாது எனவும் கூறிய அவர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு ஒரு அரசாணையை பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்தினார். 

மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடப்பதற்கு மத்திய அரசும், தமிழக பா.ஜ.க வும் முழு ஒத்துழைப்பு அளிக்குமெனவும், அதனை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் உணர்வுபூர்வமாக ஆதரவு அளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க  தமிழர்களுக்கு எதிரானது என சித்தரிக்க சூழ்ச்சிகள் நடப்பதாகவும், அதற்கு சில தலைவர்கள் துணை போகிறார்கள் எனவும் குற்றம்சாட்டிய அவர், தமிழகத்திற்கு பல நன்மைகளை மத்திய பா.ஜ.க  அரசு செய்து வருவதாக கூறினார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...