பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததைக் கண்டித்து தனியார் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்


கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் அமைந்துள்ளது பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இக்கல்லூரி நிர்வாகம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறும்.

இக்கொண்டாட்டத்தில், உரியடித்தல், சிலம்பாட்டம், மேளதாளத்துடன் கலை நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் மாட்டு வண்டி வளம் வருதல் உள்ளிட்டவை நடைபெற்று பொங்கல் வைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடுவர்.

இந்நிலையில், மத்திய அரசு தற்போது பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, இக்கல்லூரி நிர்வாகத்தினரும் கல்லூரி வளாகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததாக கூறப்படுகிறது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கல்லூரியின் நுழைவு வாயிலின் முன்பு திரண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...