பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததைக் கண்டித்து தனியார் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்


கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் அமைந்துள்ளது பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இக்கல்லூரி நிர்வாகம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறும்.

இக்கொண்டாட்டத்தில், உரியடித்தல், சிலம்பாட்டம், மேளதாளத்துடன் கலை நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் மாட்டு வண்டி வளம் வருதல் உள்ளிட்டவை நடைபெற்று பொங்கல் வைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடுவர்.

இந்நிலையில், மத்திய அரசு தற்போது பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, இக்கல்லூரி நிர்வாகத்தினரும் கல்லூரி வளாகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததாக கூறப்படுகிறது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கல்லூரியின் நுழைவு வாயிலின் முன்பு திரண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...