மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட குறைந்தபட்ச கூலியை வழங்கக் கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தின் மக்கள் தொகைக்கேற்ப புதிய துப்புரவாளர்களுக்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்திற்கு சங்கத்தின் துணைச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். இதில், அனைத்து ஊராட்சி அமைப்புகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவேண்டும். மாவட்டத்தின் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். நிரந்திர பணிக்கு ஆட்களை எடுக்கும்போது ஒப்பந்த பணியில் உள்ள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமலாக்கப்படவேண்டும்.

அதேபோல துப்புரவு பணிகளில் ஈடுபடுகிற ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த குறைந்த பட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 300 ரூபாயை மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்துமட்ட ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக ஒத்தக்கால்மண்டப பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் தராமல் நிர்வாகம் இழுத்தடித்தது. இதனை கண்டித்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் அறிவித்த ஊதிய உயர்வோடு வழங்கப்பட்டது. 

இதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அப்பகுதி தொழிலாளர்கள் மற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...