கோவை மாநகராட்சி 52வது வார்டில் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தீவிர வாக்கு சேகரிப்பு..!

அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.



கோவை: கோவை மாநகராட்சி 52 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.



திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், கோவை மாநகராட்சி வார்டு 52 மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும், திமுக வெற்றி வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் இன்று தனலட்சுமி நகர், ராம் லட்சுமணன் நகர், ஸ்ரீ தனலட்சுமி நகர், தனலட்சுமி நகர் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.



அப்பொழுது அவர் கூறியதாவது:-

எனக்கு இந்த வார்டில் போட்டியிட வாய்ப்பளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது முறையாக நான் இந்த வார்டில் போட்டியிடுகிறேன். நான் வெற்றி பெற்றதும் இந்த பகுதியில் உள்ள மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றித் தருவேன். செம்மொழி மாநாடு நடந்தபோது முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் கோவை மாநகரில் 1000 செம்மொழி பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பூங்காக்கள் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்த பகுதியில் உள்ள செம்மொழி பூங்காவை புதுப்பித்து தர நடவடிக்கை எடுப்பேன். மேலும், இந்த பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதாக மக்கள் தெரிவித்தனர். நான் வெற்றி பெற்றதும் இரண்டு நாளைக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.



மேலும், மழை நீர் வடிகால் பாதாள சாக்கடை இணைப்பு ஆகிய பணிகளை உடனடியாக செய்து தருவேன். எனவே வாக்காளர்கள் ஆகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும், அவருடன் பகுதி பொறுப்பாளர் வே. பாலசுப்பிரமணியம், மா. ரவி சிங்கை பிரபாகரன் ex.mc.சி.எஸ்.முருகேஷ், சின்னமணி, ஆர். செல்வராஜ், கே. செல்வராஜ், அரசு கோவிந்தராஜ் பழனிசாமி, சுந்தர்ராஜ், பொன்னுசாமி மனோகரன், குணசீலன், அர்ஜுனன், ஆறுமுகம், பத்மநாபன் செல்வராஜ், ராஜேஷ், மகளிரணி பரிமளம், மைதிலி சிபிஎம் கட்சியின் ஜெயபால், கோவர்த்தனன், பாலாஜி, மற்றும் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.



Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...