தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கக்கோரி கோவையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கக்கோரி, கோவையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும், தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை தமிழ்மொழியை பயிற்று மொழியாக்க வேண்டும், அரசுப்பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 100 சதவீதம் பணி வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சிவானந்தா காலணி பகுதியில் பேரூர் ஆதினம் வளர் தமிழ் இயக்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் பேரூர் ஆதின இளையப்பட்டம் மருதாச்சல அடிகாளர், தமிழ் அமைப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக கற்பிக்கப்பட்டு வரும் நிலையை மாற்றி, அனைத்து தொடக்க பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற தமிழக அரசின் கொள்கைப்படி உயர் நீதிமன்றம், ஆட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ் மொழியை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், தமிழக அரசு உடனடியாக இக்கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தவில்லை எனில் தமிழறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...