பின்னலாடை துறையின் முக்கிய மூலப்பொருளான நூலின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக நூலுக்கு மானியம் வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: பின்னலாடை துறையின் முக்கிய மூலப்பொருளான நூலின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக நூலுக்கு மானியம் வழங்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி பாஜக சார்பில் திருப்பூரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.

திருப்பூரின் பிரதான தொழிலான பின்னலாடை துறைக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல். ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே நூலின் விலை ஏற்றமாகவே இருந்து வருவதால் பின்னலாடை துறையினர் கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை மத்திய, மாநில அரசுகளுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக கடந்த வருடம் முழு அடைப்பு, இந்த மாதம் இரு நாட்கள் வேலை நிறுத்தம் என பல்வேறு கவன ஈர்ப்புகளை பின்னலாடை தொழில் துறையினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நூல் மற்றும் பஞ்சுகளுக்கு மானியங்களை வழங்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தி திருப்பூரில் பா.ஜ.க சார்பில் இன்று காலை முதல் மாலை வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் புஷ்பா சிக்னல் சந்திப்பில் பா.ஜ.க சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திருப்பூரின் பிரதான தொழிலான பின்னலாடை துறைக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல். ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே நூலின் விலை ஏற்றமாகவே இருந்து வருவதால் பின்னலாடை துறையினர் கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை மத்திய, மாநில அரசுகளுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக கடந்த வருடம் முழு அடைப்பு, இந்த மாதம் இரு நாட்கள் வேலை நிறுத்தம் என பல்வேறு கவன ஈர்ப்புகளை பின்னலாடை தொழில் துறையினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நூல் மற்றும் பஞ்சுகளுக்கு மானியங்களை வழங்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தி திருப்பூரில் பா.ஜ.க சார்பில் இன்று காலை முதல் மாலை வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் புஷ்பா சிக்னல் சந்திப்பில் பா.ஜ.க சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.