ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அளவீடு செய்து ஒப்படைக்கப்படாததால், சொந்த இடத்தில் குடியேற முடியாமல் வாடகை வீடுகளில் வசித்து வருவதாக 330 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மூர்த்தி ரெட்டிபாளையம், சகாயபுரம், நெய்க்காரம்பாளையம், பெரியார் நகர், சத்யா நகர், சாம்பவலசு, கோட்டை மாநகர், கள்ளிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 330 குடும்பங்களுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீரணம்பாளையம் கிராமத்தில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

ஆனால், பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தும் இதுவரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அளவீடு செய்து ஒப்படைக்கவில்லை என பயனாளிகள் குற்றம்சாட்டினர். இதனால், பட்டா பெற்ற பின்னரும் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் குடியேற முடியாமல், வாடகை வீடுகளில் வசித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை நிலங்களை உடனடியாக அளவீடு செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, பட்டா பெற்ற பயனாளிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
ஆனால், பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தும் இதுவரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அளவீடு செய்து ஒப்படைக்கவில்லை என பயனாளிகள் குற்றம்சாட்டினர். இதனால், பட்டா பெற்ற பின்னரும் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் குடியேற முடியாமல், வாடகை வீடுகளில் வசித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை நிலங்களை உடனடியாக அளவீடு செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, பட்டா பெற்ற பயனாளிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.