நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அளவீடு செய்து ஒப்படைக்கப்படாததால், சொந்த இடத்தில் குடியேற முடியாமல் வாடகை வீடுகளில் வசித்து வருவதாக 330 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மூர்த்தி ரெட்டிபாளையம், சகாயபுரம், நெய்க்காரம்பாளையம், பெரியார் நகர், சத்யா நகர், சாம்பவலசு, கோட்டை மாநகர், கள்ளிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 330 குடும்பங்களுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீரணம்பாளையம் கிராமத்தில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.



ஆனால், பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தும் இதுவரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அளவீடு செய்து ஒப்படைக்கவில்லை என பயனாளிகள் குற்றம்சாட்டினர். இதனால், பட்டா பெற்ற பின்னரும் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் குடியேற முடியாமல், வாடகை வீடுகளில் வசித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே, தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை நிலங்களை உடனடியாக அளவீடு செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, பட்டா பெற்ற பயனாளிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...