ஏடிஎம்மில் மோசடியில் ஈடுபட்டவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு மாறாக கணக்கு காட்டிய பெண் காவல் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்


பொள்ளாச்சியை சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபர் கடந்த அக்டோபர் மாதம் கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக வந்த வேளாண் கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் பணம் எடுத்து தருவதாகக் கூறி அவரது ஏடிஎம் அட்டையை மோசடி செய்து பறித்துள்ளார்.

மேலும், அவருக்கு போலி அட்டையை கொடுத்தனுப்பிய அந்த வாலிபர் பேராசிரியரின் கணக்கிலிருந்து 35 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட கோவை காட்டூர் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரியா மாலினி, செந்தில்குமாரை கைது செய்தார். தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை செய்து சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளார். 

ஆனால், காவல்துறை பதிவேட்டில் குறைந்த மதிப்பிலான தொகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபர் செந்தில்குமாரின் உறவினர் அளித்த தகவலின் பேரில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நடத்திய விசாரணையில் பெண் காவல் ஆய்வாளர் பிரியா மாலினி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கமளிக்க வலியுறுத்தியுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...