பல்குத்தும் குச்சியில் தேசிய தலைவரின் உருவத்தை வரைந்த சேலத்தின் இளைஞர், கோவையின் கலைஞர்!

கோவை மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் கலைஞர் தான் எஸ்.கமலக்கண்ணன். சேலம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் அங்கு தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.



பல்வேறு கலைத் திறமைகளை தன்னுள் வைத்துள்ள இவர் தற்போது பல்குத்தும் குச்சிகள் மூலம் கலைப்படைப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

 

அதாவது, பல்குத்தும் குச்சிகளைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தி ஆகியோரின் உருவச் சிலையை வரைந்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், தூய்மையான பாரதம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இதனை நான் உருவாக்கியுள்ளேன். எனது இந்தச் சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெரும் என எதிர்பார்க்கிறேன். 

எனது படைப்பில் தேசியக் கொடியின் மேற்பரப்பில் குழந்தைத் தொழிலாளர்கள், தண்ணீர் சேமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், மரங்களை பாதுகாப்போம் உள்ளிட்ட பல விழிப்புணர்வு படங்களை வரைந்துள்ளேன்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...