ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மற்றும் குருத்வாரா சிங் சபா இணைந்து கோவையில் சீக்கியர் போர்க்கலை நிகழ்ச்சி

குருகோவிந் சிங்-யின் 350- வது பிறந்தநாளை முன்னிட்டு ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மற்றும் குருத்வாரா சிங் சபா இணைந்து சீக்கியர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கட்கா என்னும் சிறப்பு நிகழ்ச்சி குருத்வாரா அமைப்பினரால் நடத்தப்பட்டது.



கட்கா கலை குறித்து குருத்வாரா சிங் சபாவின் துணைத் தலைவர் குர்ப்ரீத் சிங் கூறுகையில், இந்நிகழ்ச்சியின் நோக்கம் பஞ்சாப்பின் போர்க்கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும். இதற்காக பஞ்சாப்பில் இருந்து 21 கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்கா என்னும் கலையில் நிபுணர்களாவர். சீக்கிய மதத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து கோவை மக்கள் அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது" என்றார்.



கோவையை தங்களது வாழ்விடமாகக் கொண்டு சுமார் 60 சீக்கிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் குருத்வாரா சிங் சபாவில் உறுப்பினர்களாகவும் உள்ளனர். சீக்கிய மதத்தின் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட அவர்கள் ஒன்றிணைந்து 10-வது குருவின் 350-வது பிறந்த நாளை கொண்டாடினர்.



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...