கோவை வடவள்ளியை அடுத்த, பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை வடவள்ளியை அடுத்த, பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, கோவை மாநகர் மேற்கு மாவட்டம், வடவள்ளி அடுத்த, பாப்பநாயக்கன்புதூர் பகுதி கழகத்திற்குட்பட்ட, வார்டு எண் 41, 74, மற்றும் 75 ஆகிய வார்டுகளில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன், அனைத்து பாக முகவர்களுக்கும், தேர்தல் குறித்து, ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களின் பெயர் அடங்கிய குறிப்பேடுகளை வழங்கி, வீடு வீடாக வாக்காளர்கள் கணக்கெடுக்கும் பணியினை விரைந்து செய்திட அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பகுதி கழகப் பொறுப்பாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மூன்று வார்டுகளைச் சேர்ந்த 380 வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, கோவை மாநகர் மேற்கு மாவட்டம், வடவள்ளி அடுத்த, பாப்பநாயக்கன்புதூர் பகுதி கழகத்திற்குட்பட்ட, வார்டு எண் 41, 74, மற்றும் 75 ஆகிய வார்டுகளில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன், அனைத்து பாக முகவர்களுக்கும், தேர்தல் குறித்து, ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களின் பெயர் அடங்கிய குறிப்பேடுகளை வழங்கி, வீடு வீடாக வாக்காளர்கள் கணக்கெடுக்கும் பணியினை விரைந்து செய்திட அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பகுதி கழகப் பொறுப்பாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மூன்று வார்டுகளைச் சேர்ந்த 380 வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.