பொள்ளாச்சியில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை பலாத்கார வழக்கில் கைது செய்து மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை: பொள்ளாச்சியில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை பலாத்கார வழக்கில் கைது செய்து மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது பெண்ணிற்கு, உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரது உறவினர்கள், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பரிசோதனையில், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், பொள்ளாச்சி பாலக்காடு ரோடு மண்ணூர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம்(39), பெயிண்டிங் தொழிலாளி, அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானது தெரிய வந்தது.
இதையடுத்து, பாலசுப்பிரமணியம் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது பெண்ணிற்கு, உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரது உறவினர்கள், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பரிசோதனையில், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், பொள்ளாச்சி பாலக்காடு ரோடு மண்ணூர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம்(39), பெயிண்டிங் தொழிலாளி, அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானது தெரிய வந்தது.
இதையடுத்து, பாலசுப்பிரமணியம் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.