பெரியம்மாவை நகைக்காக கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

2016 ஆம் ஆண்டு கடனை அடைக்க தனது பெரியம்மாவை கொலை செய்து 7 பவுன் நகையை திருடிய குற்றத்திற்காக, ரவி பிரகாஷ் என்பவருக்கு இன்று கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியை சேர்ந்த ரவி பிரகாஷ் என்பவர் 2016 ஆம் ஆண்டு கடனை அடைக்க தனது பெரியம்மாவை கொலை செய்து 7 பவுன் நகையை திருடிய குற்றத்திற்காக, இன்று அவருக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கோவை ஆனைமலையை சேர்ந்த ரவி பிரகாஷ், என்பவர் தொழில் செய்து வந்துள்ளார். தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக பலரிடம் கடன் பெற்றுள்ளார். கடன் பெற்று முதலீடு செய்தும், தொழிலில் போதிய வருவாய் கிடைக்காததால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். 

எனவே, கடனை அடைக்க வேண்டும் என முடிவு செய்த ரவிபிரகாஷ், 2016 ஆம் ஆண்டு தனியாக இருந்த தனது பெரியம்மா அருக்காணியை கழுத்தை இறுக்கி கொலை செய்து, அவரிடம் இருந்த 7 பவுன் நகைகளை திருடி விட்டு, அந்த நகையை அடமானம் வைத்து ரவிபிரகாஷ் கடனை அடைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஆனைமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் 2018 ஆம் ஆண்டு ரவிபிரகாஷை கைது செய்தனர். வங்கியில் அடமானம் வைத்திருந்த திருடிய நகைகளை, மீட்டெடுக்கும் போது ரவி பிரகாஷ் காவல்துறையினரிடம் பிடிபட்டார்.

இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று ரவிபிரகாஷூக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...