பின்னர், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனம் தீப்பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் சூரியபிரகாஷ் (24). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் நேற்று மாலை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது பைக்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சூரிய பிரகாஷ் பைக்கில் தீப்பிடித்தது. லேசாக பிடித்த தீ மளமளவென பற்றி எரிந்தது. இதையடுத்து, பைக்கை பெட்ரோல் பங்கின் ஓரமாக சூரியபிரகாஷ் தள்ளிவிட்டார்.
பிறகு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த ஊழியர்கள் அங்கிருந்த தீயணைப்பு கருவிகளை வைத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும், தீ கட்டுப்படாமல் இருந்தது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பைக் முழுமையாக எரிந்து சேதமானது. இதுபற்றி தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் சூரியபிரகாஷ் (24). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் நேற்று மாலை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது பைக்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சூரிய பிரகாஷ் பைக்கில் தீப்பிடித்தது. லேசாக பிடித்த தீ மளமளவென பற்றி எரிந்தது. இதையடுத்து, பைக்கை பெட்ரோல் பங்கின் ஓரமாக சூரியபிரகாஷ் தள்ளிவிட்டார்.
பிறகு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த ஊழியர்கள் அங்கிருந்த தீயணைப்பு கருவிகளை வைத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும், தீ கட்டுப்படாமல் இருந்தது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பைக் முழுமையாக எரிந்து சேதமானது. இதுபற்றி தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.