நீக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கனரா வங்கி வணிக தொடர்பாளர்கள் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் கனரா வங்கியில் மட்டும் 70 வணிக தொடர்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் வங்கியின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களை மக்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்குவது அவர்களுடைய பணியாக இருந்து வருகிறது.
முதியோர் உதவித்தொகை விநியோகம் செய்தல், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பயனாளிகளின் ஊதியம் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களை பயனாளிகளில் இருப்பிடத்திற்கே சென்று இவர்கள் வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், இவர்கள் அரசிற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வங்கி வணிக தொடர்பாளர்கள் சார்பில் இன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதன்படி, தமிழக அரசின் ஓய்வூதிய பணம் வழங்க அரசு 30 ரூபாய் வங்கி வழங்குகிறது எனில், அதில் 20 ரூபாய் எங்களுக்கு வழங்க வேண்டும், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து வங்கி சேவையை வழங்கிய எங்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், நீக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், குறைக்கப்பட்ட பரிவர்த்தனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கனரா வங்கியில் மட்டும் 70 வணிக தொடர்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் வங்கியின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களை மக்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்குவது அவர்களுடைய பணியாக இருந்து வருகிறது.
முதியோர் உதவித்தொகை விநியோகம் செய்தல், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பயனாளிகளின் ஊதியம் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களை பயனாளிகளில் இருப்பிடத்திற்கே சென்று இவர்கள் வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், இவர்கள் அரசிற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வங்கி வணிக தொடர்பாளர்கள் சார்பில் இன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதன்படி, தமிழக அரசின் ஓய்வூதிய பணம் வழங்க அரசு 30 ரூபாய் வங்கி வழங்குகிறது எனில், அதில் 20 ரூபாய் எங்களுக்கு வழங்க வேண்டும், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து வங்கி சேவையை வழங்கிய எங்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், நீக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், குறைக்கப்பட்ட பரிவர்த்தனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.