திருப்பூர் மாவட்ட கனரா வங்கி வணிக தொடர்பாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

நீக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.


திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கனரா வங்கி வணிக தொடர்பாளர்கள் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் கனரா வங்கியில் மட்டும் 70 வணிக தொடர்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் வங்கியின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களை மக்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்குவது அவர்களுடைய பணியாக இருந்து வருகிறது.

முதியோர் உதவித்தொகை விநியோகம் செய்தல், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பயனாளிகளின் ஊதியம் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களை பயனாளிகளில் இருப்பிடத்திற்கே சென்று இவர்கள் வழங்கி வருகிறார்கள்.



இந்நிலையில், இவர்கள் அரசிற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வங்கி வணிக தொடர்பாளர்கள் சார்பில் இன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதன்படி, தமிழக அரசின் ஓய்வூதிய பணம் வழங்க அரசு 30 ரூபாய் வங்கி வழங்குகிறது எனில், அதில் 20 ரூபாய் எங்களுக்கு வழங்க வேண்டும், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து வங்கி சேவையை வழங்கிய எங்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், நீக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், குறைக்கப்பட்ட பரிவர்த்தனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...