மீண்டும் மஞ்சள் பையை பயன்படுத்துவோம்..!! திருப்பூரில் 8ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு பயிலும் சகோதரிகள் விழிப்புணர்வு..!

மீண்டும் மஞ்சள் பை என்ற விழிப்புணர்வு இயக்கத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் சகோதரிகள் இருவரும் இணைந்து இன்று 15 கிலோ மீட்டர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் மீண்டும் மஞ்சள் பை என்பதை பின்பற்றும் வகையில் மஞ்சள் பையை அனைவரும் பயன்படுத்துவோம் என எட்டு மற்றும் ஆறாம் வகுப்புகளில் பயிலும் சகோதரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி மாரிமுத்து என்பவரின் மகள்கள் பிரேமா மற்றும் உமா. இருவரும் கணபதி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 மற்றும் 6ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

சமீபத்தில் தமிழக முதல்வர் அறிவித்த மீண்டும் மஞ்சள் பை என்ற விழிப்புணர்வு இயக்கத்தை பரவலாக அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் சகோதரிகள் இருவரும் இணைந்து இன்று 15 கிலோ மீட்டர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

கணபதி பாளையம் பகுதியில் ஆரம்பித்த இவர்களது நடை பயணத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து தொடங்கி வைத்துள்ளனர்.



15 கிலோ மீட்டர் நடைபயணமாக வந்த இவர்கள் நடைபயணத்தின் போது சந்தித்த மக்களிடம் மஞ்சள் பை மற்றும் துணி பைகளை பயன்படுத்துங்கள், பிளாஸ்டிக் பயன்பாடு உள்ள கவர்களை பயன்படுத்துவதை தவிருங்கள் என்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...