திருப்பூரில் மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களுக்கு லஞ்சம் பெற்று சான்றிதழ் வழங்குவதாக அரசு மருத்துவர் மீது புகார்..!

போலியாக பெற்ற சான்றிதழ் மூலம் அரசின் சலுகைகளை பெறுவதாக போட்டோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களுக்கு லஞ்சம் பெற்று சான்றிதழ் வழங்கி வருவதாக அரசு மருத்துவர் மீது ஆதாரத்துடன் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்துள்ளனர்.



திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் நரம்பியல் மருத்துவர் சிவக்குமார் மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களிடம் லஞ்சம் பெற்று மாற்றுத்திறனாளி சதவீத சான்றிதழ் வழங்கி வருவதாகவும், லேசான மாற்றுத்திறனாளிகளுக்கும் 500 ரூபாய் முதல் லஞ்சமாக பெற்று 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இதனால் உண்மையான பயனாளிகள் தவிர்த்து ஏராளமானோர் அரசின் சலுகைகளை பெற்று வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், உண்மையான பயனாளிகளுக்கு சான்றிதழ் தர மறுத்து வருவதாகவும், லஞ்சம் கொடுத்துப் பெறும் சான்றிதழ்கள் மூலம் இடைத்தரகர்கள் உட்பட பலர் மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெற்று வருவதாகவும், நந்தகுமார் என்பவர் மாற்றுத்திறனாளி இல்லாத நிலையில் போலியாக பெற்ற சான்றிதழ் மூலம் அரசின் சலுகைகளை பெற்று வருவதாகவும் போட்டோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...