போலியாக பெற்ற சான்றிதழ் மூலம் அரசின் சலுகைகளை பெறுவதாக போட்டோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களுக்கு லஞ்சம் பெற்று சான்றிதழ் வழங்கி வருவதாக அரசு மருத்துவர் மீது ஆதாரத்துடன் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் நரம்பியல் மருத்துவர் சிவக்குமார் மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களிடம் லஞ்சம் பெற்று மாற்றுத்திறனாளி சதவீத சான்றிதழ் வழங்கி வருவதாகவும், லேசான மாற்றுத்திறனாளிகளுக்கும் 500 ரூபாய் முதல் லஞ்சமாக பெற்று 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் உண்மையான பயனாளிகள் தவிர்த்து ஏராளமானோர் அரசின் சலுகைகளை பெற்று வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், உண்மையான பயனாளிகளுக்கு சான்றிதழ் தர மறுத்து வருவதாகவும், லஞ்சம் கொடுத்துப் பெறும் சான்றிதழ்கள் மூலம் இடைத்தரகர்கள் உட்பட பலர் மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெற்று வருவதாகவும், நந்தகுமார் என்பவர் மாற்றுத்திறனாளி இல்லாத நிலையில் போலியாக பெற்ற சான்றிதழ் மூலம் அரசின் சலுகைகளை பெற்று வருவதாகவும் போட்டோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் நரம்பியல் மருத்துவர் சிவக்குமார் மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களிடம் லஞ்சம் பெற்று மாற்றுத்திறனாளி சதவீத சான்றிதழ் வழங்கி வருவதாகவும், லேசான மாற்றுத்திறனாளிகளுக்கும் 500 ரூபாய் முதல் லஞ்சமாக பெற்று 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் உண்மையான பயனாளிகள் தவிர்த்து ஏராளமானோர் அரசின் சலுகைகளை பெற்று வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், உண்மையான பயனாளிகளுக்கு சான்றிதழ் தர மறுத்து வருவதாகவும், லஞ்சம் கொடுத்துப் பெறும் சான்றிதழ்கள் மூலம் இடைத்தரகர்கள் உட்பட பலர் மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெற்று வருவதாகவும், நந்தகுமார் என்பவர் மாற்றுத்திறனாளி இல்லாத நிலையில் போலியாக பெற்ற சான்றிதழ் மூலம் அரசின் சலுகைகளை பெற்று வருவதாகவும் போட்டோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.