அழிக்கப்பட்டு வரும் நீர் நிலைகளை பாதுகாக்க 'நீர் நிலை பாதுகாப்பு சட்டம்' இயற்றக்கோரி கோவை பாமகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

இலவசமாக கிடைக்க வேண்டிய குடிநீர் வியாபார பொருளாக மாற்றப்பட்டுள்ளது. சம்பாதிக்கும் பணத்தின் 50% தண்ணீருக்காக செலவழிக்கும் நிலை உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.



கோவை: அழிக்கப்பட்டு வரும் நீர் நிலைகளை பாதுகாக்க "நீர் நிலை பாதுகாப்பு சட்டம்" இயற்றக்கோரி கோவை பாமகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நீர் நிலைகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் ஆக்கிரமிப்புகளாலும், கனிம வளச்சுரண்டல்களாலும் அழிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு நீர் நிலை பாதுகாப்பு வரைவு மசோதாவை நீர் நிலை சட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோவை மாவட்ட பாமகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பாமகவினர் நீர் நிலை பாதுகாப்பு வரைவு மசோதாவில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சட்ட விரோதமாக நீர் நிலைகளை ஆக்கிரமித்தும், அந்த நிலங்களை விற்று விட்டனர் என குற்றம்சாட்டினர்.

இது குறித்து மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கூறும்போது, கடந்த 30 ஆண்டுகளில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளாலும், இயற்கை வளச்சுரண்டல்களாலும் அழிக்கப்பட்டு வருகிறது. தற்போது இலவசமாக கிடைக்க வேண்டிய குடிநீர் வியாபார பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் சம்பாதிக்கும் பணத்தின் 50% தண்ணீருக்காக செலவழிக்கும் நிலை உள்ளது.

எனவே, நீர் நிலைகளை பாதுகாப்பு வரைவு மசோதாவில் உள்ள ஓட்டைகளை மாற்றியுள்ளதாகவும் அதனை தமிழக முதல்வரிடம் கொடுக்கும் முயற்சியாக மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக சட்டமாக இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதில் கோவை மாநகர பாமக இளைஞர் அணி துணை செயலாளர் ஜாய் மேகஸ்வெல், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...