இன்று தொடங்கும் ஆய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் குறித்து கண்டறியும் 4ம் கட்ட ஆய்வு இன்று தொடங்குவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளது குறித்து கண்டறிய சுகாதாரத் துறை சாா்பில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்டவா்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவையில் பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றால் குறித்து கண்டறியும் 4ம் கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது.
ஏற்கெனவே நடைபெற்ற 3 ஆய்வுகளில் 42 இடங்களில் தலா 30 போ் வீதம் 1,260 பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், 4ம் கட்ட ஆய்வில் 52 இடங்களில் 1,560 பேரிடம் ஆய்வு செய்யவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனர்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக புதிய கிளஸ்டா்கள் உருவாகியுள்ளன. இதனால், தற்போதைய ஆய்வில் 10 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கும் ஆய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்படும். பின் கிளியா மெஷின் மூலம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, மாநில சுகாதாரத் துறைக்கு முடிவுகளின் விவரங்கள் அளிக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முதல் கட்ட ஆய்வில் 22.5 சதவீதம் பேருக்கும், 2 ஆம் கட்ட ஆய்வில் 20 சதவீதம் பேருக்கும், 3 ஆவது கட்ட ஆய்வில் 44 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளது குறித்து கண்டறிய சுகாதாரத் துறை சாா்பில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்டவா்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவையில் பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றால் குறித்து கண்டறியும் 4ம் கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது.
ஏற்கெனவே நடைபெற்ற 3 ஆய்வுகளில் 42 இடங்களில் தலா 30 போ் வீதம் 1,260 பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், 4ம் கட்ட ஆய்வில் 52 இடங்களில் 1,560 பேரிடம் ஆய்வு செய்யவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனர்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக புதிய கிளஸ்டா்கள் உருவாகியுள்ளன. இதனால், தற்போதைய ஆய்வில் 10 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கும் ஆய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்படும். பின் கிளியா மெஷின் மூலம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, மாநில சுகாதாரத் துறைக்கு முடிவுகளின் விவரங்கள் அளிக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முதல் கட்ட ஆய்வில் 22.5 சதவீதம் பேருக்கும், 2 ஆம் கட்ட ஆய்வில் 20 சதவீதம் பேருக்கும், 3 ஆவது கட்ட ஆய்வில் 44 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.