கோவை மாநகராட்சியில் ரூ. 6 கோடி மதிப்பில் 10 புதிய தார் சாலை பணிகள்..!! அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்..!

மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் மக்கள் பணியாற்றக் கூடியவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 6.01 கோடி மதிப்பீட்டில் தார் சாலை போடும் பணிகளை பூமி பூஜை செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார்.



தொடர்ந்து சாலை பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி பகுதியில் 6 கோடி மதிப்பில் 10 சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்த பணிகள் நிறைவடையும் என்றார்.

கடந்த ஆட்சியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. மக்கள் சபை நிகழ்ச்சியில் சாலைகள் மோசமாக இருப்பது குறித்தும், பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடப்படாமல் இருப்பது குறித்தும் பொது மக்கள் மனு அளித்தனர்.

இதனையடுத்து, முதல்கட்டமாக ரூ. 6 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மாநகரம் முழுவதும் சாலைகள் மேம்படுத்தும் பணி நடைபெறும்.



கோவை நகரில் மேம்பாலப் பணிகள் தொய்வடைந்து இருப்பதற்கு காரணம் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது தான். வழக்கு தொடுத்து இருப்பவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாலப்பணிகள் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்காமல் செய்யப்பட்டதால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

செம்மொழி பூங்கா அமைப்பதற்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் சாலை, குடிநீர் வசதி போன்றவை இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் மக்கள் பணியாற்றக் கூடியவர்களை மக்கள் தேர்வு செய்வார்கள் என்று அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், பையா என்கிற கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...