இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக திறப்பு விழா

இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.



திருப்பூர்: இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.



இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:-



தமிழக அரசு பொங்கல் பரிசாக ஒன்று ரூபாய் 5,000-வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் சித்திரை 1 ஆம் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார்கள்.

தற்போது மீண்டும் தமிழ்ப் புத்தாண்டை திமுக தை 1 ஆம் நாள் என மாற்ற முயற்சிக்கின்றது. நமது பாரம்பரியம் சித்திரை மாதம் என்பதால் தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் தான் கொண்டாட வேண்டும்.

ஈவேராவின் சிந்தனைகளைக் கொளுத்தி போகி கொண்டாட வேண்டும். தமிழக அரசு ஓமைக்ரானை காரணம் காட்டி இந்து பண்டிகைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர்.

ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகை எனச் சொல்லாமல் அரையாண்டு விடுமுறை என விடுமுறை அறிவித்துள்ளார்கள். திமுக தலைவராக இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லத் தேவையில்லை.

ஆனால், முதல்வராக நிச்சயமாக இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். பிரதமரின் வருகை தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வரும். பிரதமரின் வருகையைத் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது. சுதந்திர தினத்தின் மஹோத்சவத்தை அந்தமானில் இந்து மக்கள் கட்சி நடத்த உள்ளது.

கோவை மண்டலத்தில் அதிமுக செல்வாக்கு பெற்றுள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற திமுக நினைக்கிறது. லாட்டரி மார்டின், காருண்யா உள்ளிட்டோருடன் கூட்டணி வைத்து செந்தில் பாலாஜியைக் களமிறக்கி உள்ளது.

பாசிச திமுக குறித்து நாம் தமிழர் உணர வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு இந்த விஷயத்தில் உறுதுணையாக நாங்கள் இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...