கணவனைக் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய சம்பவம் தொடர்பாக, மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கோவை: கணவனை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக் காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்தவர் ராஜா (36). இவருக்கு ரீனா (வயது 36) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை, இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மனைவி ரீனா துடியலூர் போலீசாரிடம் புகாரளித்தார்.
இதனையடுத்து இவ்வழக்கை துடியலூர் போலீசார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்தனர். இதனையடுத்து தனது சகோதரர் ராஜா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சகோதரி மாலா (42) துடியலூர் போலீசில் புகாரளித்தார்.
இந்நிலையில் ராஜாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவ்வழக்கை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து தற்கொலை வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்த போலீசார் இறந்த ராஜாவின் மனைவி ரீனா மற்றும் கள்ளக்காதலன் சதீஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கணவனைக் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்தவர் ராஜா (36). இவருக்கு ரீனா (வயது 36) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை, இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மனைவி ரீனா துடியலூர் போலீசாரிடம் புகாரளித்தார்.
இதனையடுத்து இவ்வழக்கை துடியலூர் போலீசார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்தனர். இதனையடுத்து தனது சகோதரர் ராஜா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சகோதரி மாலா (42) துடியலூர் போலீசில் புகாரளித்தார்.
இந்நிலையில் ராஜாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவ்வழக்கை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து தற்கொலை வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்த போலீசார் இறந்த ராஜாவின் மனைவி ரீனா மற்றும் கள்ளக்காதலன் சதீஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கணவனைக் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.