பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு, ஆழியாற்றில் உள்ள கவியருவியில், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
கோவை: பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு, ஆழியாற்றில் உள்ள கவியருவியில், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியாறு அணை, கவியருவி, ஆழியாறு பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா தளங்களாக உள்ளன.
இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கும் குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளாக உள்ளன.
இந்நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும், தொடர் விடுமுறை காரணமாகவும் ஆழியாறு பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் படை எடுத்தனர்.

ஆழியாறு சென்ற சுற்றுலாப் பயணிகள் பலரும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவி அருகில் சென்று ரம்மியமாகக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவிலிருந்ததால் கவி அருவியில் ஏராளமான வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதேபோல ஆழியாறு பூங்கா, ஆழியாறு காற்றின் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் ஆழியாறு காவல் நிலைய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியாறு அணை, கவியருவி, ஆழியாறு பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா தளங்களாக உள்ளன.
இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கும் குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளாக உள்ளன.
இந்நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும், தொடர் விடுமுறை காரணமாகவும் ஆழியாறு பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் படை எடுத்தனர்.
ஆழியாறு சென்ற சுற்றுலாப் பயணிகள் பலரும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவி அருகில் சென்று ரம்மியமாகக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவிலிருந்ததால் கவி அருவியில் ஏராளமான வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதேபோல ஆழியாறு பூங்கா, ஆழியாறு காற்றின் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் ஆழியாறு காவல் நிலைய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.