பொள்ளாச்சியில் கருத்து வேறுபாடு காரணமாக காதலி பேச மறுத்ததால், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சியில் கருத்து வேறுபாடு காரணமாக காதலி பேச மறுத்ததால், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி கரிகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தண்டபாணி, என்பவரது மகன் அஜய் (19). இவர் மூன்று ஆண்டுகளாக அவருடன் கல்லூரியில் படித்த மாணவியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அந்த மாணவி அஜய் போனை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி கரிகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தண்டபாணி, என்பவரது மகன் அஜய் (19). இவர் மூன்று ஆண்டுகளாக அவருடன் கல்லூரியில் படித்த மாணவியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அந்த மாணவி அஜய் போனை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.